மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 December, 2020 6:46 PM IST
Credit : Samayam

தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக, 'செல்வமகள்' சேமிப்பு கணக்கு (Selvamagal savings account) துவங்க, திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் (Rotary Club) திட்டமிட்டுள்ளது. இதனால், செல்வமகள் திட்டம் பற்றி அறியாதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கு பேருதவியாக அமையும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி (PM Modi) அறிமுகப்படுத்தினார். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் (Post Office) கணக்கு துவங்கலாம். ஓராண்டுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் டெபாசிட் (Deposit) செய்ய வேண்டும். ஆண்டுக்கு, 7.6 சதவீத வட்டி (Interest) உண்டு. 21 வயதில் கணக்கு முடிக்கும் போது, மூன்று மடங்கு தொகை கிடைப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ரோட்டரி கிளப் - இலவச உதவி:

தமிழகத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் (Rotary Club) சார்பில், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு (Free Account) துவங்கப்பட உள்ளது. ரோட்டரி கிளப் தலைவர் ரகுபதி (Ragupathi) கூறுகையில், அந்தந்த பகுதியில் உள்ள பயனாளர்கள், தபால் அலுவலகங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவரின் பெயரிலும், 250 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கப்படும். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், இதற்கான பாஸ்புத்தகம் (Passbook) விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு:

ரோட்டரி கிளப் அளிக்கும் இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், 98435 12288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

English Summary: Rotary Club Free Help to Join Selvamagal Savings Program! Call the parents!
Published on: 30 December 2020, 06:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now