மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 May, 2022 11:10 AM IST

அரியானாவில் 2 ஃபேன், 2 பல்பு மட்டுமே கொண்ட குடிசை வீடு ஒன்றுக்கு மின்கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்டிருப்பது, சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். பெயிண்டர் தொழில் செய்யும் இவருக்கு, ரூ. 2.5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் பிரேம் குமார் என்ற அந்த நபர், ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.

கண்டிப்பா செலுத்த

இதில் அதிர்ச்சியின் உச்சமான விஷயம் என்னவென்றால், பிரேம் குமாரின் குடும்பத்தினர் 2 மின்விசிறிகள் மற்றும் 2 பல்புகள் மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில் ரூ. 2.5 லட்சம் மின்கட்டணத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து உள்ளூர் மின்சார அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பிரேம் குமார், முதல்வர் சாளரத்தில், குறை தீர்க்கும் அமைப்பில் புகார் அளித்துள்ளார். மேலும், மின் கட்டணத்தை சரி செய்ய மின்சாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சீத் சவுதலாவை அணுக உள்ளார்.

இதுகுறித்து மின்துறை துணை கோட்ட அலுவலர் கூறுகையில், வீட்டின் மின்நுகர்வை ஒப்பிடும்போது மின்கட்டணம் அதிகமாக உள்ளது. மின்கட்டணம் அதிகமானதற்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய மின்கட்டணம் மின்மீட்டரில் உள்ள அளவின்படி விதிக்கப்பட்டுள்ளது. மின்மீட்டரை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு சரியான பில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.மீட்டர் காட்டும் ரீடிங்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம்தானே.

மேலும் படிக்க...

ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!

மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

English Summary: Rs. 2.5 lakh current bill - Suppression is cruel!
Published on: 13 May 2022, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now