மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2021 8:49 PM IST
Credit : Fincash

எஸ்.பி.ஐ., வங்கி, அதன் வீட்டுக்கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக, அறிவித்துள்ளது. மேலும், வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தையும், 100 சதவீதம் தள்ளுபடி (100% discount) செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வட்டியை குறைத்தது

வீட்டுக் கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான புதிய வீட்டுக்கடனுக்கான (House loan) வட்டி, 6.80 சதவீதமாகும். 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு, வட்டி, 6.95 சதவீதமாக இருக்கும். மேலும், வீட்டுக் கடன் பெறும் மகளிருக்கு, வட்டியில், 0.05 சதவீதம் சலுகையும் வழங்கப்படும். நாட்டில் உள்ள எட்டு மிகப் பெரிய நகரங்களில், 5 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியிலும், 0.30 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

யோனோ செயலி மூலம் கடன்:

வங்கியின், ‘யோனோ’ செயலி (Yono App) மூலமாக வீட்டுக்கடன் கோருபவர்களுக்கு கூடுதலாக, 0.05 சதவீத வட்டி சலுகை கிடைக்கும். தகுதிவாய்ந்த, ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றவர்களும், ‘யோனோ’ செயலி மூலம் கடனை, அதிகரித்துக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டியை SBI வங்கி குறைத்துள்ளதை அடுத்து, பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு!

English Summary: SBI cuts interest rates on home loans
Published on: 09 January 2021, 08:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now