Blogs

Wednesday, 20 October 2021 06:21 PM , by: R. Balakrishnan

Scholarships for students

இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் மாணவிகளுக்கு பிரகதி உதவித்தொகை (Scholarships) வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதிகள்:

  • தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவிகள் அல்லது ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், &'லேட்ரல் என்ட்ரி’ முறையில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவிகள்.
  • ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் தகுதியுடையவர்கள்.
  • குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை:

ஆண்டுக்கு மொத்தம் 5,000 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை விபரம்:

ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும், இரண்டாம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவிகளுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

’நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்’ (National Scholarship Portal) வாயிலாக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

10ம் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். இந்திய அரசின் அறிவிப்பின்படி, இட ஒதுக்கீடு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் டி.பி.டி., முறையில் உதவித்தொகை வழங்கப்படும்.

டிப்ளமா மாணவிகள்:

உதவித்தொகை எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை, குடும்ப வருமானம் அனைத்தும் பட்டப்படிப்பு மாணவிகளுக்கான தகுதியே டிப்ளமா மாணவிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை பொருத்தவரை, 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

மேலும் படிக்க

இல்லம் தேடி கல்வி: தமிழக அரசின் புதிய திட்டம்!

குழந்தைகளின் வருங்காலத்திற்கு எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)