Blogs

Tuesday, 18 October 2022 10:39 AM , by: Elavarse Sivakumar

தங்க தீபாவளி என்ற பெயரில் எடைக்கு எடை தங்கத்துக்கு வெள்ளி வழங்கும் சிறப்புத் திட்டத்தை ஜிஆர்டி ஜூவல்லரி அறிமுகம் செய்துள்ளது.பாரம்பரிய மற்றும்‌ நவீன ஆபரணங்களை உருவாக்குவதில்‌ அதன்‌ தூய்மை மற்றும்‌ நேர்த்தியான கைவினைத்திறனுக்காக மிகவும்‌ பிரசித்தி பெற்றது இந்த ஜூவல்லரி.

ஸ்வர்ண தீபாவளி

ஜிஆர்டி எப்போதும்‌ தங்கள்‌ வாடிக்கையாளர்களின்‌ பொன்னான தருணங்களுக்கு மேன்மேலும்‌ பிரகாசத்தை அளிக்கிறது. அந்த வகையில்,  ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்‌ நிறுவனமும்‌ இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்‌ வருகைக்காக காத்திருக்கிறது. இது பேரொளி மற்றும்‌ புன்னகையை பரப்பும்‌ சந்தர்ப்பமாகும்‌. அதேபோல, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்‌ தமிழ்நாட்டில்‌ தங்க தீபாவளி ஆஃபரையும்‌, ஆந்திரா, தெலுங்கானா மற்றும்‌ கர்நாடகாவில்‌ ஸ்வர்ண தீபாவளி ஆஃபரையும்‌ அறிமுகப்படுத்தியுள்ளது.

வெள்ளி இலவசம்

இதன்படி ஒவ்வொரு முறையும்‌ வாடிக்கையாளர்கள்‌ வாங்கும்‌ தங்கத்தின்‌ எடைக்கு சமமான வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது ஒரு காரட்‌ வைரத்திற்கு 25 கிராம்‌ வெள்ளி இலவசம்‌.

பிற சலுகைகள்

வெள்ளிப்‌ பொருட்களுக்கான செய்கூலியில்‌ 25 சதவீதம் மற்றும்‌ வெள்ளி நகைகளின்‌ MRP-இல்‌ 10 சதவீதமும் தள்ளுபடி என்று பல விதமான அசத்தலான சலுகைகளை ஜிஆர்டி வழங்குகிறது.

வெள்ளி இலவசம்‌

தங்க தீபாவளி திட்டம் குறித்து ஜிஆர்டி‌ ஜூவல்லர்ஸ்ஸின்‌ நிர்வாக இயக்குநர்‌ ஜி.ஆர்‌. அனந்த பத்மநாபன்‌ கூறுகையில்‌, ”நம்‌ நாட்டில்‌ உள்ள அனைவருக்கும்‌ தீபாவளி ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும்‌. ஒவ்வொரு வீடும்‌ மகிழ்ச்சியுடன்‌ ஒளிரும்‌ விதத்தில்‌, எங்கள்‌ புதிய சலுகைகளின்‌ மூலம் தீப ஒளியில்‌ மகிழ்ச்சியைச்‌ சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக்‌ கொண்டுள்ளோம்‌. தங்க நகைகளுக்கு இணையான வெள்ளி இலவசம்‌ என்பது உண்மையிலேயே ஒரு அற்புதமான சலுகையாகும்‌. மேலும்‌ எங்கள்‌ வாடிக்கையாளர்கள்‌ உண்மையிலேயே ஜிஆர்டி ஜூவல்லர்ஸில்‌ வாங்குவதை விட அதிகமாக வீட்டிற்கு தங்கம்‌, வெள்ளி மற்றும்‌ வைரம்‌ எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌ என்று நாங்கள்‌ விரும்புகிறோம்‌. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)