மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2020 12:56 PM IST

மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு, கட்டணமில்லா கோடை உழவு செய்து தரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கோடை உழவு நடைபெற்று வருகிறது. எனினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு தொடர்ந்து உழவு பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. போதிய தொழிலாளர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட வேளாண்மைத் துறை தடையின்றி உழவு பணி தொடர விவசாயிகளுக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் செய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கோடைக்கு ஏற்ற பயிரான உளுந்து, கம்பு, துவரம், பச்சை பயறு போன்றவற்றை பயிரிடுகின்றனர். நடப்பாண்டில் இப்பணி தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே வரும் காலத்திற்கான தானிய உற்பத்தியினையும், அதன் இருப்பையும் நம்மால் உறுதி செய்ய இயலும்.

கோடை உழவை மேற்கொள்ளும் சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாக செய்து தரப்படும் உழவுப் பணிகளை பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்து தங்களின் தேவையை உறுதி செய்யவும். இதுவரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கரும், சிறு விவசாயிகளுக்கு 5 ஏக்கரும் இலவசமாக உழவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

English Summary: Small and Medium Farmer Get your field Ploughed Free of Cost From The Government
Published on: 29 April 2020, 12:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now