Blogs

Monday, 13 September 2021 07:13 AM , by: R. Balakrishnan

Small Change in APY

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இருந்து முன்கூட்டியே விலகுவதற்கான விதிமுறையை, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாக அடல் பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிர்வகித்து வரும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம், இதற்கான வரவேற்பை அதிகரிக்கும் வகையில், உறுப்பினர்கள் முன்கூட்டியே விலகுவதை எளிதாக்கியுள்ளது.

அடல் பென்ஷன்

அடல் பென்ஷன் திட்ட உறுப்பினர்கள், 60 வயதுக்கு முன் வெளியேற விரும்பினால், உடனடி வங்கிக் கணக்கை சரிபார்த்தல் மூலம் இதை நிறைவேற்றலாம் என பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. பென்ஷன் திட்ட உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி வரும் வங்கிக் கணக்கை செயல்பாட்டில் வைத்திருந்தால், அதன் மூலம் அவர்கள் கோரிக்கை உறுதி செய்யப்பட்டு, சேமிப்பு கணக்கிற்கு பணம் மாற்றப்படும்.

சேமிப்பு கணக்கு செயல் இழந்திருந்தால், நிரந்தர கணக்கு எண்ணில் நிலுவை பணம் பராமரிக்கப்படும்.எனினும் உறுப்பினர்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறுவதை விட, தங்கள் பங்களிப்பை தாமதமாக செலுத்தலாம். பங்களிப்பை நிறுத்துவதால் கணக்கு செயல் இழக்கம் செய்யப்படாது. பின், சிறிதளவு அபராதம் செலுத்தி பங்களிப்பை தொடரலாம்.

மேலும் படிக்க

அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ அரசின் புதிய திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)