Blogs

Saturday, 09 October 2021 08:48 AM , by: R. Balakrishnan

Solar powered electric cars

மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் நுழையும் அதே வேளையில், சர்வதேச சந்தையில் சூரிய சக்தியால் (Solar Power) இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. மின்சார கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்கள் தேவை. இவை உடனடியாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. சார்ஜிங் உள்கட்டமைப்பு முழுமையாக மேன்மையடையாவிட்டால், மின்சார கார்களை ஓட்டுவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மின்சார கார்களில் சூரிய சக்தி சார்ஜிங்

இதை மனதில் வைத்து, சில மின்சார கார் (Electric Car) உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார கார்களில் சோலார் சார்ஜிங் அம்சத்தைச் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக கார் ஓட்டுனர்கள் கார்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் ஸ்டேஷன்களைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. உலகின் இரண்டு சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றுக்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் இவற்றை சாலைகளில் காண முடியும்.

காரில் சோலார் பேனல்

இந்த கார் (Car) சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்படுகிறது. காரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 1000 மைல்கள் அல்லது சுமார் 1,600 கிலோமீட்டர் வரை இவற்றை இயக்க முடியும். Aptera Paradigm-க்காக நிறுவனம் ப்ரீ ஆர்டர் சேலைத் துவக்கியது. அதில் இந்த கார் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக விற்கப்பட்டது.

ஹம்பிள் ஒன்னின் சிறந்த அம்சங்கள்

ஹம்பிள் ஒன் சோலார் கூரை, மின்சாரம் தயாரிக்கும் பக்க விளக்குகள், பியர்-டு-பியர் சார்ஜிங், மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மற்றும் ஃபோல்ட் அவுட் சோலார் அரே விங்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றின் உதவியுடன், எஸ்யூவியின் பேட்டரி எளிதில் சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும்.

எஸ்யூவி ஹம்பிள் ஒன்

Aptera Paradigm-ஐப் போலவே, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹம்பிள் மோட்டார்ஸ் எஸ்யூவி ஹம்பிள் ஒன்னை வடிவமைத்துள்ளது. இந்த காரும் சூரிய சக்தியால் (Solar Energy) இயக்கப்படுகிறது. இந்த காரின் கூரை உட்பட பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி இந்த கார் பேட்டரியை (Battery) சார்ஜ் செய்கிறது.

மேலும் படிக்க

குப்பையில்லாத நகரங்களே தூய்மை இந்தியாவின் இலக்கு! பிரதமர் பேச்சு!

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்க முதலீடு தரும் புதிய பலன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)