நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 April, 2022 2:03 PM IST
Solar storm to hit Earth

சூரியனில் இருந்து வெளியேறும் மிக பிரம்மாண்டமான புவிகாந்த புயல் இன்று பூமியை தாக்கும் என, உலகம் முழுதும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சூரியனின் கருந்துகள் பரப்பில் உருவாகும் பிரமாண்ட வெப்ப புயல், பூமி மற்றும் இதர கோள்களை நோக்கி கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இது, புவிகாந்த புயலாக மாறி பூமியை தாக்கும்.

புவிகாந்த புயல் (Geomagnetic storm)

புவிகாந்த புயல் இன்று பூமியை தாக்கக்கூடும் என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' (NASA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சி.இ.எஸ்.எஸ்.ஐ., எனப்படும் இந்திய விண்வெளி சிறப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் இந்த புவிகாந்த புயல் வினாடிக்கு, 429 - 575 கி.மீ., வேகத்தில் பயணித்து பூமியை இன்று தாக்க அதிக வாய்ப்புள்ளது. இது, மின் தொகுதிகளை பாதிக்கும். இதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் மின் சேவை துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, உயரமான மலைப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புவிகாந்த புயல்களின் வேகத்தை, 'ஜி - 1' முதல் 'ஜி - 5' வரை விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர்.

இதில், ஜி - 1 வகை புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. இன்று தாக்கவுள்ள சூரியப் புயலின் வேகம் ஜி - 2 வகையைச் சார்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

புதிய மின் இணைப்பு தேவையெனில் உயிர்காக்கும் கருவி கட்டாயம்!

72 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் அதிகபட்ச வெயில்!

English Summary: Solar storm to hit Earth: Space Research Center warning!
Published on: 14 April 2022, 02:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now