மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 December, 2021 9:09 PM IST
Happy news for Pensioners

பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இது ஜீவன் பிரமான பத்திரம் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்.

கால அவகாசம்

கால அவகாசம் முடிந்த நிலையில் நிறையப் பேர் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பில் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டது. இது பென்சன் வாங்குவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. இதையடுத்து நிறையப் பேர் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விதமாக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தினால் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

தொழில்நுட்பம் (Technology)

பென்சன் வாங்கும் நபர்களுக்காக Face Recognition என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முகத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அம்சமாகும்.
ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக ஏற்கெனவே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது Face Recognition தொழில்நுட்பமும் வந்துள்ளது.

இனி இந்த தொழில்நுட்பமே பென்சன் தாரரின் ஆயுள் சான்றாக செயல்படும். இதனால் பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்கள் நிம்மதியடைந்துள்ளனர். கொரோனா போன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து வீட்டிலேயே வந்து ஆயுள் சான்றிதழ் பெற்றுச் செல்லும் வசதி, வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சேமிப்பை எளிதாக உயர்த்த 30 நாள் திட்டத்தை கடைபிடியுங்கள்!

வங்கிகளுக்கு டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

English Summary: Super announcement for Pensioners!
Published on: 04 December 2021, 09:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now