பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இது ஜீவன் பிரமான பத்திரம் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்.
கால அவகாசம்
கால அவகாசம் முடிந்த நிலையில் நிறையப் பேர் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பில் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டது. இது பென்சன் வாங்குவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. இதையடுத்து நிறையப் பேர் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விதமாக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தினால் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இருக்காது.
தொழில்நுட்பம் (Technology)
பென்சன் வாங்கும் நபர்களுக்காக Face Recognition என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முகத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அம்சமாகும்.
ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக ஏற்கெனவே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது Face Recognition தொழில்நுட்பமும் வந்துள்ளது.
இனி இந்த தொழில்நுட்பமே பென்சன் தாரரின் ஆயுள் சான்றாக செயல்படும். இதனால் பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்கள் நிம்மதியடைந்துள்ளனர். கொரோனா போன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து வீட்டிலேயே வந்து ஆயுள் சான்றிதழ் பெற்றுச் செல்லும் வசதி, வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சேமிப்பை எளிதாக உயர்த்த 30 நாள் திட்டத்தை கடைபிடியுங்கள்!
வங்கிகளுக்கு டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!