மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2022 6:53 AM IST
Sweet news for Pensionors

பென்சனர்கள் மற்றும் முதியோருக்காக தனி இணையதளம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். இந்த இணையதளம் பென்சனர்களுடன் தொடர்பில் இருக்கும் எனவும் அவர்களின் கருத்துகள், குறைகளை கேட்க வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையதளம் (Website)

பென்சன் விதிமுறைகளை திருத்துவதற்கான நிலைக் குழுவின் 32ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பென்சனர் சங்கங்கள் பங்கேற்றன. இந்நிகழ்வில் மத்திய பணியாளர் மற்றும் பென்சன் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “பென்சனர்கள் பயன்பெறுவதற்காக தனி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். பென்சன் வாங்குவோர் தங்கள் குறைகளை டிஜிட்டல் வழியில் தெரிவிக்கவும், அதிகாரிகளை சந்திக்காமல் குறைகளை தீர்த்துக்கொள்ளவும் இந்த பென்சன் இணையதளம் உதவும்.

பென்சன் வழங்குவது தொடர்பான அனைத்து அமைச்சகங்களும் இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். எல்லா குறைகளும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் திட்டம் 2020 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் 3,08,625 வாழ்வுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 100 நகரங்களில் பென்சனரின் வீட்டுக்கே வந்து வாழ்வுச் சான்றிதழ் பெறும் வசதியை பொதுத்துறை வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

PF உறுப்பினர்களே: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்!

பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இதைச் செய்து உடனே இணைக்கலாம்!

English Summary: Sweet news for Pensionors: The government's super plan!
Published on: 13 April 2022, 06:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now