Blogs

Monday, 01 August 2022 10:27 AM , by: Elavarse Sivakumar

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் ஆட்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 4 முதல் குரூப் 1 வரையிலான தேர்வுகளும், பிற துறை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது தேர்வாணையம் 5 விதமான தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

கணக்கு அலுவலர் (Accounts Officer)

காலியிடங்கள் (Vacancy)

23

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountants / Cost Accountants படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.56,900 – ரூ.2,09,200

விண்ணப்பிக்க கடைசி தேதி (Last date)

13.08.2022

உதவி இயக்குனர் சமூக நலத்துறை (Assistant Director)

காலியிடங்கள் (Vacancy)

11

கல்வித் தகுதி(Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.56,100 –  ரூ.2,05,700

விண்ணப்பிக்க கடைசி தேதி (Last date)

6.08.2022

வயதுத் தகுதி(Age Limit)

01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம் (Fee)

ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் (Fee) :

ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)