Blogs

Wednesday, 08 January 2020 11:18 AM , by: Anitha Jegadeesan

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் வார இறுதி நாட்களில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

பயிற்சியில் கறவை மாடுகள் வளர்ப்பு,  புதிய தொழில் நுட்பங்கள்,  கொட்டகை மேலாண்மை, தீவன மேலாண்மை, நோய் மற்றும் தடுக்கும் முறைகள், வியாபார உத்திகள்,  வங்கிக்கடன் உதவி போன்ற அனைத்து விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி முகாமானது மதுரை - தேனி ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் சார்பில், அங்குள்ள உழவர் பயிற்சி கூடத்தில் வைத்து நடை பெற உள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்போர், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

வரும் 9, 10 (நாளை, மறுநாள்) இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளதால், கலந்துக் கொள்ள விரும்புவார்கள் 94431 08832 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய போராசிரியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)