மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 February, 2020 12:11 PM IST

தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இவ்வாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்காக ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கும் தோட்டக்கலை துறையினர் ஆலோசனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பழ மரங்களை சாகுபடி செய்து  ஊடுபயிராகவும், குறுகியகால பயிராகிய காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு அறிவுறுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் நிரந்தர வருவாய் கிடைக்கும் என்கிறார்கள்.

பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிப்பதன் மூலம் அத்துடன் தொடர்புடைய பழங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபடலாம். விரைவில் கெட்டு போகும் பழங்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் மூலம் இழப்பீடுகளை குறைத்து கூடுதல் வருவாய் பெற இயலும். இதற்காக, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கு மாநில தோட்டக்கலை துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியினை உயர்த்துவதன் மூலம்  தன்னிறைவு அடைய முடியம். இத்திட்டம் சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் அரசு தோட்டக்கலைப் பண்ணை வாயிலாக விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் மண் வளம்,  தட்ப வெப்பத்திற்கு ஏற்ப முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

English Summary: Tamilnadu Horticulture Department plans to work on Fruit and vegetables crop
Published on: 12 February 2020, 12:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now