Blogs

Friday, 22 November 2019 11:33 AM

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரம் பகுதிகளில் விதைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. எனவே பின்பட்ட தாளடி மற்றும் முன்பட்ட அறுவடைக்கு ஏற்ற குறுகியகால சான்று விதை நெல் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருக்கருக்காவூர், மெலட்டூர் உள்ளிட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய கோ.ஆர் 51 ரக விதை நெல் இருப்பு உள்ளது. அப்பகுதி விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குறுகிய கால விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)