மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 April, 2020 12:17 PM IST

தமிழக அரசு வேளாண் பணிகளுக்கான தடையை தளர்த்தியதை அடுத்து, அனைத்து சிறு, குறு விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடவு மற்றும் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் முடங்கி இருந்த குறுகிய கால சாகுபடி பணிகள் உத்வேகத்துடன் நடந்து வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பால் கீரை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் செய்வதறியாது இருந்தனர்.  இந்நிலையில், வேளாண் பணிகளுக்கான தடையை நீக்கியதால், சாகுபடி செய்திருந்த கீரையை அறுவடை செய்து விற்பனை செய்ய துவங்கி விட்டனர்.

பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் உபரி வருமானத்திற்கும், உடனடி வருமானத்திற்கும் ஏற்ற குறுகிய கால சாகுபடியை தேர்ந்தெடுத்து விதைப்பார்கள். குறிப்பாக மாதமாதம் வருவாய் தரக்கூடியது கீரை சாகுபடி என்பதால் அதிக விவசாயிகள் இதில் ஈடுபட்டு இருந்தனர்.

விவசாயிகள் கூறுகையில், விளைநிலத்தில் நாற்றுகளை நடவு செய்து பின் அதிலிருந்து ஒரு மாதம் இடைவெளியில் அறுவடை செய்கிறோம். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 20 முறை அறுவடை செய்யமுடியும். மற்ற காய்கறி சாகுபடியுடன் ஒப்பிடுகையில் கீரை சாகுபடி லாபம் தருவதாக உள்ளது என்பதால் நாங்கள் இதனை செய்து வருகிறோம். அறுவடை சமயத்தில் ஊரடங்கு உத்தரவு வந்ததால், கவலையாக இருந்தது. தற்போது, தடை நீங்கியதால் அறுவடை பணியை துவக்கியுள்ளோம். கரோனா வைரஸ் தொற்று இருப்பதால், பணியாளர்கள் அனைவரும் துணியால் முகத்தை கட்டிக்கொண்டு போதிய சமூக இடைவெளியை பின்பற்றி வருகிறோம். காவல்துறையினர் அனுமதித்தால் அதிகாலையிலேயே விற்பனைக்கு சென்று விரைவில் பணமாக்கி, வீடு திரும்பிவிடுவோம் என்றார்.

English Summary: The Lockdown Doesn't Affect The Farmers Who Are Engaged With Short Term Crop
Published on: 02 April 2020, 12:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now