நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2023 9:24 AM IST

அண்டை நாடான பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ டீத்தூள் விலை ரூ.1,600 என்றால்  நம்பமுடிகிறதா? உண்மை அதுதான்.

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு பயங்கரமாக சரிந்து, விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உணவு பொருட்களில் தொடங்கி பெட்ரோல் வரை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

ரூ.1,600

இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் டீ மக்கள் பிரியப்பட்டு பருகும் பிரதான பானமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் டீ தூள் விலை கிலோ 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த 15 நாட்களிலேயே பாகிஸ்தானில் டீ விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் துறைமுகங்களில் டீ சரக்குகள் தேங்கியுள்ளதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் துறைமுகங்களுக்கு வந்த 250 கண்டய்னர்கள் இன்னும் தேங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

உயரும் அபாயம்

இதன் விளைவாகவே இன்னும் டீ விலை உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னணி டீ நிறுவனம் டீ விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் டீ விலையை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்டதால், இறக்குமதி செய்யப்பட்ட டீ சரக்குகளின் விலையை எப்படி கணக்கிடுவது என்பது கூட புரியாமல் தொழில்துறையினர் குழப்பத்தில் இருக்கின்றனர். இதனால் சரக்குகள் தேங்கி, கையிருப்பு சரிந்து, டீ விலை உயர்ந்து வருகிறது. டீ மட்டுமல்லாமல் மற்ற பொருட்களுக்கும் இதே நிலைதான்.

ரூ.2,500

துறைமுகங்களில் தேங்கி கிடக்கும் சரக்குகள் சந்தைக்குள் வரவில்லை எனில், ரமலான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டீ விலை கிலோ 2500 ரூபாயை கூட தொடக்கூடும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: The price of tea is 1600 rupees- Ouch! Details inside!
Published on: 14 February 2023, 09:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now