Blogs

Wednesday, 22 September 2021 10:47 AM , by: Elavarse Sivakumar

Credit: Dinamalar

வளர்ப்பு பிராணிகள் அல்லது செய்யப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகள் மீது அதன் எஜமானர்கள் அளவுகடந்த அன்பையும், பாசத்தையும் கொட்டுவது வழக்கம்.

அலாதி அன்பு 

ஆனால் அயல்நாடுகளை ஒப்பிட்டால், அங்கு செல்லப்பிராணிகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் நடத்துவார்கள். செல்லப்பிராணிகளுக்கென உணவு, உடை , இருப்பிடம் இவை மட்டுமல்ல, அவற்றுக்கான உற்சாகத்தை அளிப்பதற்காக, விளையாட்டு, அழகு சாதனப் பொருட்கள் என பல விதங்கள் உண்டு.

குறிப்பாக மூத்த குடிமக்கள் சிலர், தங்கள் சொத்தில் ஒருபங்கை, செல்லப்பிராணிகளின் பராமரிப்புத் செல்வுக்காக ஒதுக்குவர்.

ரூ.2.லட்சம் (Rs.2 lakhs)

அந்த வகையில், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் ஒருவர் தன் செல்லநாய்க்குட்டியுடன் பயணிக்க அனைத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களையும் வாங்கி பயணித்துள்ளார். இதற்காக அவர் செலவு செய்தது எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் அசந்து போவீர்கள். ரூ.2 லட்சத்திற்கும் அதிகமானத்தொகை.

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் செல்லப்பிராணிகள் மீது அவர்கள் செலுத்தும் அன்பு மாறுபட்டாலும், ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தப் பெண், தனது செல்ல நாய்க்குடடிக்காக விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் எனப்படும் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து முன்பதிவு செய்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அனுமதி இல்லை

பொதுவாகவே விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன், செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்குகிறது.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)