Blogs

Sunday, 14 November 2021 11:03 AM , by: R. Balakrishnan

World Record

பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டு கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதி மலையில் இலவச உணவு பெறும் பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

2கோடி பக்தர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

இது தவிர ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படுகிறது.

உலக சாதனை

சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை திருப்பதி மலையில் அதிகமாக உள்ளது. இதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பிடித்துள்ளதும் அதற்கான சான்றை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக சாதனை புத்தக இந்திய பிரதிநிதி சந்தோஷ் சுக்லா இன்று திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.

மேலும் படிக்க

மகனுக்கு "ஏ.பி.சி.டி.இ..." என வித்தியாசமாக பெயர் வைத்த தந்தை!
சாதனை: படால்சு சிகரத்தில் ஏறிய 12 வயது மாணவன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)