Blogs

Tuesday, 14 January 2020 02:21 PM , by: Anitha Jegadeesan

பூக்கள் இல்லாமல் பண்டிகைகளும், திருவிழாக்களும் முழுமை பெறாது.  முகூர்த்தத் தினங்களும் அடுத்தடுத்து வர இருப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மல்லிகைக்கு பெயர் பெற்ற மதுரையில் மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனையானது.

மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான திருமங்கலம், திருப்பரங்குன்றம், எலியார்பத்தி ஆகிய இடங்களில் இருந்து மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வந்து மாட்டுத்தாவணி பூ சந்தையில் விற்பனை செய்யப் படுகிறது.

பருவமழை, பனிபொழிவு, புயல்சின்னம் போன்ற காரணங்களால் மல்லிகைப் பூ விளைச்சல் வெகுவாக  குறைந்துவிட்டது. வரத்து குறைந்ததை அடுத்தும், முகூர்த்தத் தினங்களும், பண்டிகைகளும் அடுத்தடுத்து வருவதை தொடர்ந்து மல்லிகைப் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து. நாளை முதல் பொங்கல் விழாக்கள்  தொடங்க இருப்பதால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்திற்கு வரை விற்பனை செய்யப் படுகிறது.

பூக்களின் விலை பட்டியல் (1 கிலோ)

மல்லிகைப்பூ - ரூ.5000

மெட்ராஸ் மல்லி - ரூ.1500

முல்லை - ரூ.2000

அரளி - ரூ.250

செவ்வந்தி - ரூ.120

சம்பங்கி - ரூ.150

மரிக்கொழுந்து - ரூ.100

செண்டுப்பூ -  ரூ.70

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)