சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 December, 2019 2:32 PM IST

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தக்காளி விலை சரிந்துள்ளது. இதனால் விசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த மாதம் வரை தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து கிலோ, ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து, தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இங்குள்ள விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் 200 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சந்தையில் உள்ள இடைத்தரகர்கள்,  விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு ஒட்டு மொத்தமாக வாங்கி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகளிடம்,  கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை வாங்கி அதை, ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்து வருவதாக கூறப் படுகிறது. எனவே விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English Summary: Tomato Farmers request to the district administration, to fix minimum price
Published on: 20 December 2019, 02:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now