மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 June, 2022 7:38 AM IST

ரயில் டிக்கெட் புக்கிங் செய்யாமலேயே நீங்கள் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.இதற்கென, தனி விதிமுறையே உள்ளது. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்தான்.

ரயில் பயணம்

வெளியூர் பயணம் என்று வந்துவிட்டாலே, இந்திய மக்களில் பெரும்பாலானோர், ரயில் பயணத்தையேப் பெரிதும் விரும்புகின்றனர்.
குறிப்பாக பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடிகிறது என்பதாலும் அதிக மக்களின் சாய்ஸ்ஸாக ரயில் பயணமே உள்ளது.

பயண விதிமுறைகள்

ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக நீங்கள் IRCTC தொடர்பான விதிமுறைகளைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் திடீரென்று பயணம் செய்ய நேரிடும் போது இப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். சில நேரங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி உள்ளது.

பிளாட்பார்ம் டிக்கெட்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் உடனடியாக பயணம் செய்ய விரும்பினால், பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறிவிடலாம். அதன் பிறகு, நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டைப் பெறலாம். அப்படி ஒரு விதிமுறை உள்ளது.

ஆனால் இதைச் செய்ய நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக செக்கிங் அதிகாரியிடம் பேச வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை உங்களுக்கு ஒரு தனி டிக்கெட் தரப்படும்.சில நேரங்களில் ரயிலில் சீட் எதுவும் காலியாக இருக்காது. அப்போது, செக்கிங் அதிகாரி உங்களுக்கு சீட் கொடுக்க மறுக்கலாம். ஆனால், உங்களுடைய பயணத்தை நிறுத்த முடியாது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யவில்லை என்றால், நீங்கள் ரூ.250 அபராதத்துடன் சேர்த்து, பயணத்தின் மொத்தக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டைப் பெற வேண்டும்.

ரயில் பயணிகள் மகிழ்ச்சி

இந்திய ரயில்வேயில் இதுபோன்ற நிறைய விதிமுறைகள் உள்ளன. அவை பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கின்றன. சாமானிய மக்களின் நலனுக்காக இந்திய ரயில்வே இதுபோன்ற பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. எனவே நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ரயிலில் பயணிக்கலாம். இந்த வசதியை வேறு வழியில்லாத இக்கட்டான சூழலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அபராதம் மற்றும் செலவு அதிகம்.

மேலும் படிக்க...

நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

13 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்!

English Summary: Train travel without taking a ticket - super convenience!
Published on: 30 June 2022, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now