மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 February, 2020 11:35 AM IST

திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ளகால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் நாளை (பிப்.14) ஆம் தேதி இலவச வெண்பன்றி வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இப்பயிற்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணையாளர்கள்,  தொழில் முனைவோர்,  ஊரக மகளிர்,  இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு பயனடையலாம்.   

லாபம் தரும் பண்ணைத் தொழிலில் வெண்பன்றி வளர்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. பெருகிவரும் தேவையும், சாதகமான சந்தை வாய்ப்பும் இன்று அதிக அளவிலான பண்ணியாளர்களை உருவாக்கி வருகிறது. வெண்பன்றி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள்,  அவை குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இந்த ஒரு நாள் வகுப்பு உதவியாக இருக்கும்.

பயிற்சியின் சிறப்பம்சம்

பன்றி இனங்கள், பண்ணை/ குடில் அமைப்பு, இனப்பெருக்கம், சினைகால பராமரிப்பு, குட்டிகள் பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய் அறிகுறி மற்றும் தீர்க்கும் வழிகள், பன்றிகளை சந்தைப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.

English Summary: Training Program in Pig farming in Tamil Nadu: One Day Workshop Organized by TANUVAS
Published on: 13 February 2020, 11:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now