Blogs

Wednesday, 15 September 2021 06:51 PM , by: R. Balakrishnan

Transaction by Voice

தொழில்நுட்ப விஷயங்களில் அதிகளவு பரிட்சயம் இல்லாதோர், இனி குரல் வழியாகவே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

டோன்டேக்

'டோன்டேக்' (Dont Take) எனும் நிறுவனம் இத்தகைய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், கர்நாடகா மற்றும் பீஹார் மாநிலங்களில் 1,000 ரூபாய் வரையிலான பண பரிமாற்றத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. தற்போது, போன்கள் வாயிலாக பண பரிமாற்றம் செய்வதற்கு, மக்களுக்கு தொழில்நுட்ப பரிட்சயம் தேவைப்படுகிறது. இதனால் பலர், செயலி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த அஞ்சுகின்றனர்.

இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில், பியூச்சர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் குரல் வழியாகவே இனி பண பரிவர்த்தனை சேவையை வழங்கும் வசதியை டோன்டேக் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, வங்கிகள் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்க முடியும்.

மேலும் படிக்க

ஆவணமின்றி இலவசமாக பான் அட்டை பெற எளிய வழிமுறை இதோ

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)