நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2023 2:43 PM IST
Transgender couples who have children

ஜியா பாவல் மற்றும் ஜஹாத் தம்பதியினர் அவர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர்கள் குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி குழந்தை பெற்றுள்ள திருநங்கை தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் முதல் முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும் குழந்தை பிறந்த சம்பவம் மாற்றுப்பாலினத்தவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.

மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.

கேரளாவில் கோழிக்கோட்டு பகுதியை சேர்ந்தவர்கள் மாற்றின பாலின தம்பதிகள் ஜியாபவல் (ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை) மற்றும் ஜஹாத் (பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி).

இவர்கள் இருவரும் மாற்று பாலினத்தவர் என்பதால் சிறு வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இத்தம்பதிகள் தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று கனவு கண்டனர். இதையடுத்து இவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜாஹத் மாறியபோதும் அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து உரிய ஆலோசனை வழங்கினர்.

இந்நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நடனக்கலைஞரான ஜியாபவல் ஜஹாத் கர்ப்பமாக இருந்ததைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 8 காலை 9.30 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை ஜியா பவல்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளர்.

மேலும் ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இப்போது பொது வெளியில் கூற விரும்ப வில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜியா பவல் தனது இன்ஸ்டா கிராம் பதிவில் தனது குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குழந்தை பெற்றுள்ள மாற்றுப்பாலின தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்ற 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து பெண் குழந்தையை பெற்று எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்று பாலினத்தவர் பெற்றோர்களால் சிறு வயதிலே ஒதுக்கப்பட்டு பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு  வாழ்க்கையை தொலைக்கின்றனர், தற்பொழுது மாற்றினத்தவரின் வாழ்க்கையை மேம்படுத்த மாநில அரசும்,  மத்திய அரசும் முயற்சிகள் எடுத்து வருவது பெருமைக்குரிய ஒன்று.

மேலும் படிக்க

பென்சன், LIC, PF பணத்தை இதில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்!

என்னது! அடுத்த நிலநடுக்கம் இந்தியாவுலயா!

English Summary: Transgender couples who have children
Published on: 09 February 2023, 02:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now