நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 November, 2019 12:38 PM IST

அரியலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர்ச் சாகுபடி" என்ற நோக்கத்தில் சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம் போன்றவற்றிற்கு 75 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மானியம் வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் தற்போது அரியலூர் மாவட்டத்தில் கரும்புப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு  சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, அதிக வருவாய் பெற தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக 300 ஹெக்டர் பரப்பளவிற்கு ரூ.1.17 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகிதமும் மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

English Summary: Under Per Drop More Crop Scheme Government allotted more subsidy for sugarcane Farmers
Published on: 29 November 2019, 12:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now