மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2019 11:26 AM IST

தற்போது மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 850 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.

கால்நடைகளை தாக்கும் தொற்று நோய்களில் கோமாரி நோய் முக்கியமானதாகும். கோமாரி என்ற கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இதனால் வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். இதனால் பால் குறைதல், சினை பிடிப்பதில் சிரமம், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில்,  கால்நடைகளை பாதுகாக்கவும், விவசாயிகள்  நஷ்டம் அடையாமல் தடுக்கவும் இந்த சிறப்பு முகாமை  கால்நடை பராமரிப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தடுப்பூசியினை கால்நடைகளுக்கு போடும்போது 100 சதவீதம் பாதுகாக்க முடியும். அக்டோபர் 14 முதல் 21 ஆம் தேதி வரை அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்படும். காலை 6:00 முதல் 9:00 மணி வரையிலும்,  மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் தடுப்பூசி போடப்படும். கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Vaccination Camp to Cattle for Komari (Foot Mouth) Disease Going On
Published on: 16 October 2019, 11:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now