மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 February, 2021 6:24 PM IST

முதலீட்டின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஒரு நிலையான வருமானம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பான முதலீடு

இன்றைய சேமிப்பு தான் நாளைய எதிர்காலத்தை வளமுடன் வாழ வழிவகை செய்கிறது. பாதுகாப்பான சேமிப்பிற்கு பல்வேறு திட்டங்களில் பணம் போட்டு வைப்பார்கள். முதலீடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதேநேரம், சரியான திட்டத்தில்தான் முதலீடு செய்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி செயல்படுத்தி வருகிறது.

SBI-யின் சூப்பர் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுத் திட்டமானது டேர்ம் டெபாசிட் திட்டத்தைப் போன்றதுதான். இதில் முதலீட்டுக் காலத்தை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் வந்துகொண்டிருக்கும். இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பயன் பெறலாம்.

 

மாதம் ரூ.10,000 பெற

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மாதத்துக்கு ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால் மொத்தம் ரூ.5,07,964 முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது, இத்திட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்வதாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம். மாதத்துக்கு 1,000 ரூபாய் தொடங்கு சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை இத்திட்டத்தில் சேமித்து வந்தால் எதிர்காலத்தில் நிலையான வருமானம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். கொரோனா வந்த பிறகு பெரும்பாலானோருக்கு திடீரென நிதி நெருக்கடி ஏற்பட்டது. வேலையும் சம்பளமும் இல்லாமல் போனது. இதுபோன்ற சூழலில் சேமிப்புத் திட்டங்கள் கைகொடுக்கும்.

மேலும் படிக்க...

Atal Pension Yojana: மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் அனைவரும் மாத ஓய்வூதியம் பெற முடியும்!! தெரியுமா உங்களுக்கு!!

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!

English Summary: Want to earn Assured Rs 10,000 Every Join in this SBI scheme to get benefit
Published on: 19 February 2021, 06:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now