மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 9:02 AM IST
Benefits of Aadhar card

இந்திய குடிமகனுக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு. இது தனிநபரின் அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிப் பணியாக இருந்தாலும் சரி, சட்டப் பணியாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த ஆவணம் எதற்கெல்லாம் உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பென்சன் (Pension)

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள அட்டையாக செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் அல்லது பிற அமைப்புகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட ஜீவன் பிரமான் பத்திரம் (ஆயுள் சான்றிதழ்) அவசியம். இந்த ஆயுள் சான்றிதழ் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 10, 2014 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களின் தகவல்களைப் பெறுவதால், அவர்களது ஓய்வூதியத்தை நேரடியாக வீட்டிலேயே பெறுவதை உறுதி செய்கிறது.

பிஎம் கிசான் திட்டம் (PM Kisan)

மத்திய அரசின் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் நிதியுதவி பெற ஆதார் அவசியம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இது தவிர, பல்வேறு வகையான அரசுத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம்.

சிலிண்டர் மானியம் (Cylinder Subsidy)

பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை வெவ்வேறு அளவில் உள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும்.

கல்வி (Education)

பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இதுதவிர, ஆதார் அட்டை வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் புகைப்படம் வங்கிகளால் செல்லுபடியாகும் முகவரிச் சான்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் KYC சரிபார்ப்பு மற்றும் சுயவிவர பராமரிப்புக்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

வங்கிக் கடன் (Bank Loan)

வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். பான் கார்டு மட்டுமல்லாமல் ஆதார் கார்டையும் கடன் கொடுப்பதற்கு வங்கிகள் கேட்கின்றன. வாடிக்கையாளரின் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க

ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: வெளியாகவிருக்கும் புதிய அறிவிப்பு!

தனியார் ஊழியர்கள் பென்ஷன் வாங்க என்ன செய்ய வேண்டும்?

English Summary: What are the Benefits of Aadhar Card: Find out!
Published on: 18 May 2022, 09:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now