சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 16 August, 2021 3:03 PM IST
Investment in Gold
Investment in Gold

பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யலாம் எனும் நிலையில், இவற்றில் சிறந்த வாய்ப்பை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை இறங்கு முகமாகி அண்மையில், நான்கு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்தது. எனினும், வரும் மாதங்களில் தங்கத்தின் விலை ஏறுமுகம் கொள்ளலாம் என கருதப்படுகிறது. விலை குறையும் போது தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்ற அணுகுமுறை என்றாலும், எந்த வடிவில் தங்க முதலீட்டை மேற்கொள்வது ஏற்றதாக இருக்கும் என்பதையும் பரிசீலிப்பது அவசியம்.

இடர் உண்டு

தங்க நகை தவிர, டிஜிட்டல் தங்கம், தங்க ஈ.டி.எப்., தங்க மியூச்சுவல் பண்டுகள், தங்க சேமிப்பு பத்திரங்கள் ஆகிய வடிவிலும் முதலீடு செய்யலாம். இவற்றில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை தீர்மானிக்க இடர் அம்சம், பலன், பணமாக்கம், வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாக தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், எல்லா முதலீடுகள் போலவே இதிலும் இடர் அம்சம் உண்டு.

உதாரணமாக தங்க நகை என்றால், அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் அதன் தரத்தை உறுதி செய்வதும் அவசியம். செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் உள்ளன. டிஜிட்டல் தங்கத்தை பொருத்த வரை முதலீடு செய்வது எளிது என்றாலும், ரிசர்வ் வங்கி (Reserve Bank) அல்லது செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் இது வரவில்லை என்பதை உணர வேண்டும்.

தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்கள் தங்க விலையின் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை கொண்டவை. தங்க சேமிப்பு பத்திரம் (Gold Savings Bond) அரசால் வெளியிடப்படுகிறது என்றாலும், அதற்கு நிகரான பவுதீக தங்கம் கிடையாது. அரசின் உறுதி கொண்ட பத்திரமாக அது விளங்குகிறது.

முதலீடு பலன்

தங்க முதலீடு அளிக்கும் பலனும், அவற்றின் முதலீடு வழிக்கு ஏற்ப வேறுபடும். தங்க சேமிப்பு பத்திரம், தங்கத்தின் மதிப்பு தவிர, ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி பலன் அளிக்கிறது. தங்க ஈ.டி.எப்., எனில் தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப பலன் பெறலாம். தங்க நகை எனில், செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட அம்சங்கள் பலனை குறைக்கலாம்.

பொதுவாக தங்கம் பணமாக்கும் தன்மையை கொண்டது என்றாலும், தங்க சேமிப்பு பத்திரம் எனில் முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும். வரி விதிப்பை பொருத்த வரை, தங்க முதலீட்டிற்கு குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி பொருந்தும். தங்க பத்திரங்கள் எனும் முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி விலக்கு பெறலாம்.

இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்து பொருத்தமான முதலீடு வழியை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் தங்க பத்திரங்கள் ஏற்றதாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

குறுகிய கால அளவு எனில் தங்க இ.டி.எப்., வழியை நாடலாம். எனினும், முதலீடு நோக்கில் தங்க நகை அல்லது டிஜிட்டல் தங்கம் உகந்தது அல்ல என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க

தங்க பத்திர முதலீடு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!

வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிப்பு: மூன்று ஜாக்பாட்!

English Summary: what is the best way to invest in gold
Published on: 16 August 2021, 03:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now