மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 May, 2022 7:57 AM IST
What should private employees do to get a pension?

தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கீழ் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் கணக்கு தொடங்கலாம். குறைந்தது மாதம் 42 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கினால் போதும். 60 வயதுக்குப் பிறகு மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும்.

தகுதிகள் (Qualifications)

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டும் என்றாலும் அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம். கணக்கு தொடங்கும் போது வயது அதிகமாக இருந்தால் முதலீடு தொகை அதிகரிக்கும். அடல் பென்ஷன் கணக்கைத் தொடங்க வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

பென்ஷன் தொகை (Pension Amount)

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் 5 அடுக்குகளில் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் ரூ.5000 என பென்ஷன் பெறலாம். பென்ஷன் தொகைக்கு ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டிய தொகையும் மாறும்.

பங்களிப்பு (Share)

பென்ஷன் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு என்ற தவணைகளில் பெறலாம். முதலீடு தொகை மாதம் ரூ.42 முதல் ரூ.1,454-க்குள் இருக்கும். சேமிப்பு கணக்கிலிருந்து மாத தவணை பிடித்தம் செய்யப்படும். தவணை தொகையும் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு தவணைகளில் செலுத்தலாம்.

அபராதம் (Fine)

பென்ஷன் பங்களிப்பு தவணையைச் செலுத்தத் தாமதம் ஆனால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து தவணை பங்களிப்பைச் செலுத்தத் தவறினால் கணக்கு மூடப்படவும் வாய்ப்புள்ளது.

பென்ஷன் தொகையை முடியும் போது கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம். ஆனால் இதை ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மாத மட்டுமே செய்ய முடியும்.

மேலும் படிக்க

வங்கியில் பணம் எடுக்க ஆதார், பான் கார்டு கட்டாயம் தேவை!

குறுஞ்செய்தி மூலம் பண மோசடி: விழிப்புணர்வு அவசியம்!

English Summary: What should private employees do to get a pension?
Published on: 17 May 2022, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now