மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 March, 2020 8:14 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறுமலை பழையூர், பொன்னுருவி, புதூர், தென்மலை அகஸ்தியர்புரம், குரங்குபள்ளம் போன்ற பகுதிகளில் அதிக அளவில்  மிளகு பயிரட பட்டுள்ளன.  இங்கு விளையும் மிளகின் காரத் தன்மை தனித்துவமானது என்பதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார்  250 எக்டேர் பரப்பளவில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது. மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சமவெளிப் பகுதிகளில் நவம்பர் முதல் ஜனவரி வரைக்கும், மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரைக்கும் அறுவடைக்காலம் இருக்கும்.  கொடியில் இருக்கும்  ஒன்றிரண்டு மணிகள் பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாக மாறும் போது அறுவடை தொடங்குவார்கள். அறுவடை செய்த மிளகை வெய்யிலில் 7-10 நாட்கள் வரை நன்கு காய வைக்க வேண்டும். தற்போது உலர்த்திய மிளகை வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியில் இருந்து பிற மாவட்டம், மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.

கரோனா பாதிப்பால், மிளகு ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் வரை கிலோ ரூ.340க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.292 ஆக விலை சரிந்துள்ளது. இம்முறை  பூச்சித் தாக்குதல், வாடல் நோய்  அதிகம் இல்லாததால் சாகுபடி அதிகரித்துள்ளது. எனினும்  விலை சரிவு கவலை அளிப்பதாகவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது தடைப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

English Summary: Will Corona affect the Black Pepper Market in India? Know the Facts and current price
Published on: 23 March 2020, 08:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now