மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 September, 2021 8:26 AM IST
Credit : Dailythanthi

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்கிர எண்ணம்

பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட வார்த்தைகள் , அண்மைகாலமாக அன்றாடச் செய்திகளை அலங்கரித்து, ஆண்களின் மனம் எவ்வளவு வக்கிரமானதாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

விழிப்புணர்வு (Awareness)

இதற்கு பெண்களும் காரணம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பெற்றோரும், இது குறித்த விழிப்புணர்வைத் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஏற்படுத்திவிடுவது, இவ்வகைப் பிரச்னைகளில் இருந்துப் பெண் பிள்ளைகள் தப்பிக்கப் பெரிதும் உதவும்.

சில்மிஷ மன்னன் (King of Silmisha)

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தினார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார்.

இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார், அதிரடியான நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.

அது என்ன நிபந்தனை? (What condition is it?)

அதாவது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக குமார் ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை இஸ்திரி செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு (Tracking)

இதுகுறித்து நஜிமா கூறுகையில், இத்தீர்ப்பு பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதோடு பெண்களுக்கு எதிராக மனநிலையில் இருப்பவர்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தும். எங்கள் கிராமத்தில் 225 பெண்கள் இருக்கின்றனர். இப்பெண்கள் சுழற்சி முறையில் தங்களது ஆடைகளை லாலனிடம் துவைக்க கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

காவலர்களுக்கு வார ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

வரதட்சணை வாங்கினால், பட்டம் ரத்து- கேரள அரசு கிடுக்கிபிடி!

English Summary: Women's sarees must be washed - 6 months new sentence!
Published on: 24 September 2021, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now