நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 November, 2022 6:02 PM IST

திருவாரூரில் உளுந்து சாகுபடிக்காக தெளிப்பு நீர் பாசன மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் `நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திட்ட விஞ்ஞானி செல்வ முருகன் தெரிவித்துள்ளதாவது, “உளுந்து சாகுபடிக்கு 100 சதவீதம் மானியத்துடன்,

உளுந்து திட்டம் செயல்படுத்த தயாராக உள்ளது. இந்தத் திட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள பயனாளிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம்.

2.சூரிய கூடார உலர்த்தி நிறுவ 40% மானியம்‌

இயற்கையில்‌ அதிகமாகக்‌ கிடைக்கும்‌ சூரிய ஆற்றலைக்‌ கொண்டு, கொப்பரை தேங்காய்‌, எள்‌, நிலக்கடலை, முருங்கை இலை போன்ற வேளாண்‌ விளைபொருட்களை சுகாதாரமான முறையில்‌ சீராக உலர்த்தி, விற்பனை செய்வதன்‌ மூலம்‌ அதிக வருமானம்‌ ஈட்டிட தனிப்பட்ட விவசாயிகள்‌, விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில்‌, 400 முதல்‌ 1000 சதுர அடி வரை பாலிகார்பனேட்‌ தகடுகளுடன்‌ கூடிய சூரிய கூடார உலர்த்தியை நிறுவுவதற்கு, 40 சதவித மானியம்‌ வழங்கப்படும்‌. வட்டார அளவில்‌ வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ அமைக்க மானியம்‌ சிறு, குறு விவசாயிகள்‌ சூழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில்‌ வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைப்பதற்கு, 40 சதவித மானியம்‌ அதிகபட்சமாக ரூ.10 இலட்சம்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தில்‌ பயன்பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ உழவன்‌ செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்‌. 

3. நவீன விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு: யார் விண்ணப்பிக்கலாம்?

நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பலவகையான விருதுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.2 லட்சம் பரிசு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பரிசினை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் உழவன் செயலி மூலம் குறிப்பிட்ட படிவத்தில் ரூ.100/- பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 

4.பி.எம்.கிசான் பயனாளிகள் தொடர்ந்து 13 வது தவணை பெற E-kyc கட்டாயம்

PM kisan பயனாளிகள் 12வது தவணையை தொடர்ந்து 13வது தவணை தொகையினை பெறுவதற்கு e-kyc எனும் ஆதார் எண் பதிவு கட்டாயம் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, PM kisan பயனாளிகள் தங்கள் ஆதார் எண் பதிவை பொது சேவை மையம் மூலமாக பதிவை பூர்த்தி செய்யலாம், அல்லது தங்களது கைப்பேசியில் pm.kisan.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக, தாங்களாகவே ஆதார் எண்ணைபதிவு செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க: PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மற்றும் இடம்

5.வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி

வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டம் என்பது ரூ.1.00 இலட்சம் கோடி நிதியுடன், வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் உதவித் திட்டமாகும். இத்திட்டமானது 2020-21 முதல் 2032-33 வரை செயல்படும். இத்திட்டம் மூலமாக, வட்டி சலுகையுடன் கடன் வசதி, தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள், அறுவடைக்குப் பின் மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளுக்கு கடன் வசதி, சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி, என பல திட்டங்கள் உள்ளன.

6.பிரதம மந்திரி மன் தன் யோஜனாவில், இருப்பு மற்றும் பிற விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை அறிக

பிரதம மந்திரி மன் தன் யோஜனா PMJDY திட்டம் ஆகஸ்ட் 2014 இல் தொடங்கப்பட்டது. தற்போது வேறு கணக்குகள் இல்லாத இந்தியக் குடிமகன், இந்தத் திட்டத்தின் கீழ் எந்த வங்கிக் கிளை அல்லது வணிக நிருபர் விற்பனை நிலையத்திலும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கைத் தொடங்கலாம். இக் கணக்கு இருப்பவர்கள், PFMS போர்ட்டலான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட்டு தங்கள் கணக்கை சரிபார்க்கலாம். மேலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து திரையில் தோன்றும் கட்டணமில்லா  18004253800 அல்லது 1800112211 எண்ணிற்கு மிஸ்டு கால் செய்வதன் மூலமும் உங்கள் கணக்கை சரிபார்க்கலாம்.

7.கோவில் நிலங்களுக்கு டெண்டர் விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் குத்தகைக்கு விடப்பட்ட விவசாய நிலங்களை பராமரிக்க டெண்டர் விடப்பட்டதைக் கண்டித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் நிலத்தில் குத்தகைக்கு எடுத்து, குத்தகை தொகையை செலுத்தி பல ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அசல் குத்தகைதாரர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டனர், தற்போதைய வைத்திருப்பவர்கள் சந்ததியினர் மட்டுமே, சிலர் நிலத்தை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். சில விவசாயிகளுக்கு குத்தகை ஒப்பந்தமும் காலாவதியாகிவிட்டது.

இந்நிலையில், நிலத்தை பராமரிக்க டெண்டர் விட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. எனவே, விவசாயிகள் தங்களது நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இதனை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

8. இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி முடக்கம்

"புதிய பருத்தி அறுவடை கடந்த மாதம் தொடங்கியது, ஆனால் பல விவசாயிகள் விற்க விரும்பவில்லை. கடந்த சீசனைப் போலவே விலை உயரும் என்ற நம்பிக்கையில் பருத்திகளை பாதுகாத்து வைத்துள்ளனர்" என்று இந்திய பருத்தி சங்கத்தின் (CAI) தலைவர் அதுல் கணத்ரா கூறினார். விவசாயிகள் தங்களது கடந்த பருவ பருத்தி பயிருக்கு சாத்தியமே இல்லாத விலையைப் பெற்றனர், ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது, உள்ளூர் உற்பத்தி அதிகரித்துள்ளதால் புதிய பயிருக்கு அதே விலை கிடைக்க வாய்ப்பில்லை என்று கணத்ரா கூறினார். இதன் காரணத்தினால் இந்திய வர்த்தகர்களால் பருத்தி ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

9. இந்தியாவின் முதல் தனியார் விவசாய மண்டி 

நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரியில் தனியார் விவசாய மண்டி (சந்தை) அமைப்பதற்கான உரிமத்தை நாட்டிலேயே முதன்முறையாக FPC பெற்றுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட 100 ஏக்கர் பிரத்யேக சந்தை இடம், சேமிப்பு கூடம், செயலாக்கம் மற்றும் ஒரே கூரையின் கீழ் பேக்கேஜிங், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்கான விருப்பங்கள், கள வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்குதல் மற்றும் விவசாயிகளின் உரிமை போன்ற பல  அம்சங்களை கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (FPC) நிறுவப்பட உள்ளது. 

10. வானிலை தகவல்

இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, மேலும் 5 நாட்கள் குளிர் நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் மீனவர்களுக்கன எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் படிக்க:

வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 லட்சம்‌ மானியம்‌| மழை, வெள்ளம் குறித்து புகார் இதோ Whatsapp No.| செய்திகள்

PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மற்றும் இடம்

English Summary: 100% subsidy for gram cultivation| 40% subsidy for solar tent dryer| PM kisan E-kyc
Published on: 25 November 2022, 04:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now