Farm Info

Saturday, 25 September 2021 10:26 AM , by: Elavarse Sivakumar

Credit : Hindu Tamil

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு 1.21 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தேயிலை விவசாயம் (Tea farming)

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷணநிலையைக் கருத்தில்கொண்டே அங்குத் தேயிலை விவசாயம் பிரதானமாகச் செய்யப்படுகிறது.  இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தேயிலை விவசாயமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. 

குன்னுாரில், சிறு தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1.21 கோடி மானியம் (Rs 1.21 crore grant)

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ரூ.1.21 கோடி மானியம் வழங்கப்பட்டது.
இந்திய தேயிலை வாரியம் மற்றும் மாநில அரசின் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கும் நிகழ்ச்சி, குன்னுார் உபாசி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த, வனத்துறை ராமச்சந்திரன் பேசுகையில்,சிறு தேயிலை விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், சிறப்பு தேயிலை உற்பத்தியை சந்தைப்படுத்தவும் முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

75 பேருக்கு மானியம் (Grant for 75 people)

இந்நிலையில், கவாத்து இயந்திரம், பேட்டரி மூலம் கொழுந்து அறுவடை இயந்திரத்திற்கு, 200 சிறுவிவசாயிகளுக்கும், சிறப்பு தேயிலை துாள், ஆர்கானிக் தேயிலை துாள் விற்பனை மையம், வேலையற்ற சிறு தேயிலை விவசாய இளைஞர்கள் புதிய தேயிலை அபிவிருத்தி தொழில் துவங்குவது, மினி தேயிலை தொழிற்சாலை அமைப்பது ஆகியவற்றிற்கு, 75 பேருக்கு, மாநில அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு நிதி உதவியில், 1.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியத்தை முறையாகப் பெற்று தரமான தேயிலை துாள் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடை இல்லா சான்றுகள் (Evidence without restraint)

தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, உறுப்பினர் குமரன், துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் ஆகியோர் பேசினர். கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், 275 பேருக்கு மானியம் மற்றும் பயனாளிகளுக்குத் தடை இல்லா சான்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க...

உருவானது குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வங்கக்கடலில் மீனவர்களுக்குத் தடை!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)