மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 October, 2022 7:56 AM IST

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 12-வது தவணைத்தொகை வரும் 17ம் தேதி அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது 12 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்பட உள்ளது.

பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கொடுக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்து, உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

ரூ.6,000

பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன. இது குறித்து மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதிகளில், விடுவிக்கப்படும். மொத்தம் 12 கோடி விவசாயிகள் இந்த தொகைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களின் வங்கிக்கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.

புகார் அளிக்க

எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதேநேரத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை- தமிழக அரசு அதிரடி!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

English Summary: 12th Installment for PM-kisan Farmers- Coming on This Date!
Published on: 05 October 2022, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now