Farm Info

Monday, 24 October 2022 09:09 PM , by: Elavarse Sivakumar

பிரதமரின் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குதான். பயனாளிகள் பட்டியலில் இருந்து அதிரடியாக 15 லட்சம் விவசாயிகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட தொகையும் திரும்பப் பெறப்பட உள்ளது.

PM Kisan

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

12-வது தவணை

ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி 12-வது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

15 லட்சம் விவசாயிகள்

இந்நிலையில், PM-kisan பயனாளிகள் பட்டிலில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 15 லட்சம் விவசாயிகள் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அவர்கள், இந்தத் திட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய KYFC உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு முடிவு

இதேபோல், அரசுக்குத் தேவைப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், அரசை ஏமாற்றும் வகையில் செயல்பட்ட அனைத்து விவசாயிகளின் பெயர்களையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய வேளாண்துதைற அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.

அதிரடியாக நீக்கம்

பெயர் நீக்கம் செய்யப்பட்ட 15 லட்சம் விவசாயிகளில், 11 லட்சம் பேர் ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை. எஞ்சிய 4 லட்சம் தங்களது e-KYCயை அப்டேட் செய்யவில்லை. இதுவரை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட தொகையும் திரும்பப் பெறப்பட உள்ளது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)