மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 November, 2021 5:12 PM IST
20,500 crore electricity subsidy to farmers

16 மாவட்டங்களில் பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு வாசலுக்கு சென்று, PDS (ரேஷன்) கடைகளின் உணவு தானியங்கள் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த மெய்நிகர் கூட்டத்திற்குப் பிறகு, உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா, விவசாயிகள் மற்றும் குடியிருப்புப் பயனர்களுக்கு  ரூ. 20,500 கோடி செலவு செய்து அதனை மின் கட்டண மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

மேலும் கிரஹ ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீட்டு உபயோகப் பயனாளர்களுக்கான மானியம் தொடர்வதால், அரசின் கருவூலத்திற்கு ரூ. 4,981.69 கோடி செலவாகும் என்ற செய்தியை அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

விவசாய பம்புகள் (10 குதிரைத்திறன் கொண்ட பாம்புகள்) மற்றும் பிற விவசாயத் துறை சார்ந்த பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மொத்த பில்களில் இருந்து ரூ.15,722.87 கோடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் சுமார் 21.75 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கிடைத்ததகவலின்படி, ஒரு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் வழங்கப்படும் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. 16 மாவட்டங்களில் உள்ள 74 தொகுதிகளில் இருக்கும் 7,511 கிராமங்களில் தோராயமாக பழங்குடியினருக்கு உதவும் முக்யமந்திரி ரேஷன் ஆப்கே துவார் யோஜனா, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் பழங்குடியின குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பு (PDS) கடைகளின் மூலம் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களைப் பெறுவார்கள். இந்த மாதத்தின் இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:

LPG Price: சமையல் சிலிண்டர் விலை 266 ரூபாய் உயர்வு!

PM Kisan: விவசாயிகள் ரூ. 4000 பெற வாய்ப்புள்ளது, எப்போது?

English Summary: 20,500 crore electricity subsidy to farmers and domestic consumers
Published on: 01 November 2021, 05:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now