மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2022 7:54 AM IST

விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் கடன் சுமையில் சிறிய பங்கு குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து நிதி நிறுவனங்களிலும் வாங்கப்பட்ட குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

1.5% வட்டி மானியம்

இதன்படி,பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் கிடைக்கும்.

ரெப்போ வட்டி 5.4%

ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த மே மாதம் முதல் தற்போதைய ஆகஸ்ட் மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4%இல் இருந்து 5.40% ஆக உயர்த்தியுள்ளது. எனவே, சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

3% வட்டி மானியம்

இதேபோல், கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு தொடர்ந்து 3% வட்டி மானியம் கிடைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

English Summary: 3% interest subsidy on agricultural loans!
Published on: 17 August 2022, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now