Farm Info

Thursday, 07 October 2021 04:37 PM , by: Aruljothe Alagar

3 New type of crop that grows in high heat! University Discovery!

ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் ஒரு புதிய வகை கடலையைக் கண்டுபிடித்துள்ளது. கொண்டைக் கடலை JG-11, 14 மற்றும் 24 இல் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று பயிர்களையும் வெப்பமான இடங்களில் வளர்க்கலாம். அதன் செடிகள் உயரமாகவும் மற்றும் கோதுமை அறுவடை செய்யும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.

ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய JG-11, 14 மற்றும் 24 ஆகியவை 60 செமீ உயரம் வரை பயிரை உற்பத்தி செய்யும். தற்போது, ​​சாதாரண பயிரின் அளவு 20 செ.மீ மட்டுமே.ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் பயிர் ஆராய்ச்சியின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் அனிதா பாப்பரின் கூற்றுப்படி, JG 24 இனங்களின் உயரம் 60 செ.மீ.க்கு மேல் உள்ளது மற்றும் காய்கள் கூட தாவரத்தில் மேல்நோக்கி காணப்படுகின்றன. அறுவடை செய்யும் போது தானியங்கள் உடைந்து விழும் சாத்திய கூறுகள் குறைவு.

இந்த வகை பயிரின் 110-115 நாட்களில் முதிர்ந்து விடும் மற்றும் அதன் தானியங்கள் அளவு பெரியது, பழுப்பு நிறம். தண்டு தடிமனாகவும் வலுவாகவும் இருக்கிறது. பயிரில் ஏற்படும் நோய், உலர்ந்து விடுதல் மற்றும் அழுகல் ஆகியவற்றிலிருந்து உறுதியாக பாதுகாக்கிறது. ஒரு ஹெக்டேரில் அதன் மகசூல் 20 முதல் 25 குவிண்டால் வரை இருக்கும்.

JG-11, 14 மற்றும் 24 பயிரின் சிறப்புகள்

கொண்டைக்கடலை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசத்தின் பூந்தேல்கண்ட் பகுதியில் வளர்க்கப்படுகிறது. 110-115 நாட்களில் முதிர்ந்து விடும். அதன் பயிர், தானியமானது பெரியது, தண்டு தடிமனாகவும் வலுவாகவும் இருக்கிறது. ஜவஹர் சனா -11 மற்றும் ஜவஹர் சனா -14 ஆகிய பயிர்கள் விவசாயிகளிடையே முதல் தேர்வாகத் இருக்கின்றன.

JG -11 வறட்சியை எதிர்க்கும் அதிக மகசூல் தரும் வகையாகும். ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 18 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். தற்போது இந்த ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் இனம் ஆந்திரா மற்றும் கர்நாடகா விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

உற்பத்தி

துணைவேந்தர் டாக்டர் பி.கே. பிஸென் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சி சேவைகள் டாக்டர் ஜி.கே.கோட்டு, முதலிடமும், கர்நாடகம் நாடு முழுவதும் இந்த கொண்டை கடலை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து, விவசாயிகளுக்காக 7 வகையான பயறு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

பயறுகளை முளைகட்டி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)