Farm Info

Friday, 24 September 2021 11:34 AM , by: Aruljothe Alagar

40% subsidy for youth to set up agribusiness units! NABARD!

விவசாய மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கும், விவசாய பட்டதாரிகளுக்கு லாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் விரிவாக்க சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், இந்திய அரசு அக்ரி கிளினிக்ஸ் & அக்ரி-பிசினஸ் சென்டர்களை (ACABC) நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

இது, மாவட்ட அளவிலான பட்டறையில், நபார்ட், க்ரிஷி விக்யான் கேந்திராவில் (SKUAST) ஆனந்த்நாக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பட்டறை DDM NABARD  ரௌப் சார்கர் (Rouf Zargar) அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது & மாவட்டத்தின் பல விவசாய பட்டதாரிகள் கலந்து கொண்டனர், விவசாயத்தின் மாவட்ட தலைவர், SKUAST, தோட்டக்கலை நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்களைக் பார்த்தோமானால் வேலையற்ற வேளாண் பட்டதாரிகள் அனைவருக்கும் வேளாண் வாய்ப்புகளை வழங்குவதற்கும், விவசாயிகளின் உள்ளூர் தேவைகள் மற்றும் மலிவு விலைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த திட்டம் நோக்கமாக இருப்பதாக டிடிஎம் கூறியுள்ளது.

இந்த வணிக மையங்கள்/கிளினிக்குகள் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு நிபுணர் ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்க வேண்டும். தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAGE), நோடல் பயிற்சி நிறுவனங்கள் (NTI கள்) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான 60 நாட்கள் பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்று டிடிஎம் தெரிவித்துள்ளது.

பயிற்சிக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களுக்கு அலகு தொடங்க 20 லட்சம் முதல் 1 கோடி வரை (தனிநபர் அல்லது குழு) வங்கிக் கடன் வழங்கப்படும். நபார்டு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியத்தையும்,  தாழ்த்தப்பட்ட சாதி, பட்டியல் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) மற்றும் வடகிழக்கு, மலை பகுதி மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 44% மானியத்தையும் வழங்கும்

AgriClinics & AgriBusiness Centers (ACABC) பற்றி

இந்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நபார்டு உடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சிறந்த விவசாய முறைகளை எடுத்துச் செல்லும் ஒரு தனித்துவமான திட்டத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் பொதுவாககுவிந்து கிடக்கும் விவசாய பட்டதாரிகளை கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் புதிய பட்டதாரியாக இருக்கலாம் அல்லது நீங்கள் வேலை செய்பவராக அல்லது வேலையில் இல்லாமலும் இருக்கலாம், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இப்போதே நீங்கள் உங்கள் சொந்த அக்ரி கிளினிக் அல்லது அக்ரி பிசினஸ் மையத்தை அமைத்து எண்ணற்ற விவசாயிகளுக்கு தொழில் விரிவாக்க சேவைகளை வழங்கலாம்.

வேளாண்மை அல்லது பட்டு வளர்ப்பு, தோட்டக்கலை, வனவியல், கால்நடை, கோழி வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளம் போன்ற அனைத்து பாடத்திலும் பட்டதாரிகளுக்கு அரசு தொடக்கப் பயிற்சியை வழங்கி வருகிறது. பயிற்சியை முடிப்பவர்கள் வழங்கப்படும் சிறப்பு தொடக்கக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

NABARD ஆட்சேர்ப்பு 2021: நபார்டில் சிறப்பு ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!! முழு விவரம் உள்ளே!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)