சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 22 December, 2022 7:36 PM IST
Cucumber Cultivation
Cucumber Cultivation

விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாஸ்கரன் (55), 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி குறைந்த இடத்தில் வெள்ளரி சாகுபடி செய்தார்.

அதில் நல்ல லாபத்தையும் பார்த்துள்ளார். அவரின் சக்சஸ் ஃபார்முலாவை நம்மிடம் பகிர்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”25 சென்ட் நிலப்பரப்பில் வெள்ளரியில் எமிஸ்டார் என்ற ரகத்தை பயிர் செய்தேன். இந்த பயிர் சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக ரூபாய்.4.675 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ட்ரிப்ஸ் மூலம் செடிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 50 சதவீதம் மானியம் தோட்டுக்கடை துறை மூலமாகவும் 50 சதவீதம் விவசாயியும் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன் எப்பவும் கரும்பு தான் நான் சாகுபடி செய்து வருவேன். ஆனால் அதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்பட்டது.

போகப் போக வறட்சி அதிகமாக இருந்த காரணத்தால் அதற்கு மாற்றாக வேறு ஏதாவது பயிர் செய்ய நினைத்தேன். அப்போது தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்து லாபம் பார்க்கக் கூடிய பயிரை கேட்டேன்.

அப்போது தோட்டக்கலை துறை அதிகாரிகள் குறைந்த இடம் மற்றும் குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியும். அதன்பின் ஆயிரம் சதுர மீட்டரில் வெள்ளரியில் எமிஸ்டார் என்ற ரகத்தை பயிர் செய்ய ஆரம்பித்தேன்.

ஆயிரம் சதுர மீட்டருக்கு 2000 விதைகள் தேவைப்பட்டது. ஒவ்வொரு விதைக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு நடவு செய்தேன். செடி வளர்ந்து 35 வது நாளிலிருந்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.

நல்ல பராமரிப்புடன், செடிகளை கவனித்து வந்தால், ஒரு அறுவடைக்கு குறைந்தபட்சம் 300 முதல் 700 கிலோ வரை வெள்ளரியை அறுவடை செய்ய முடியும். இந்த வெள்ளரி ரகத்தின் ஆயுட்காலம் 100 முதல் 120 நாட்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு மூன்று முறை சாகுபடி செய்ய முடியும்.

மேலும் படிக்க:

விவசாயிகளே! கடவுள் வழிபாட்டுக்கு உகந்த 5 மலர்கள்

பொங்கல் பரிசு எப்போது? முதலவர் முடிவு என்ன?

English Summary: 5 lakh income in cucumber cultivation
Published on: 22 December 2022, 07:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now