நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 June, 2022 10:56 AM IST

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால் தவறாது வாங்கிப் பயனடையுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22 ம் வருடம் சொர்ணவாரி காரீப் பருவத்தில் சுமார் 2200 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள் சுமார் 3708 ஹெக்டேரும், பயறுவகை 7702 ஹெக்டேரும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 14246 ஹெக்டேரும் பயிரிடப்பட்டது.

நீர் சேமிப்பு

சொர்ணவாரி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பயன்படுத்தி சாகுபடி செய்தால் 40 சதவீதம் அளவு நீரை சேமிக்கலாம். நெல் சாகுபடி செய்துள்ள வரப்புகளில் பயறுவகை பயிர் விதைகளை நடவு செய்தால் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.

செலவு குறையும்

வரப்புகளில் பயறுவகை பயிர்களில் உள்ள சாறு உறுஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் வண்டு, ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள், நெல் பயிரைத் தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு மற்றும் புகையான் பூச்சிகளையும் உண்கின்றன. இதனால், நெல் பயிருக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செலவினம் குறையும்.

ரகங்கள்

தற்போது சொர்ணவாரி பருவத்தில் சாகுபடிக்கு தேவையான ஏற்ற ரகங்களான ஏடிடீ 37,42 கோ 51 சான்றுநிலை நெல் விதைகள், 15 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மேலும் நெல் தவிர சிறுதானியங்கள் 7 மெட்ரிக் டன், பயறுவகை விதைகள் 15 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 40 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

50% மானியத்தில்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வரப்பு பயிருக்கு தேவையான அனைத்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து பயிர்சாகுபடிக்கும் தேவையான நுண்ணுட்ட மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

உயிர்காதலி மரணம்- சிதையில் எரிந்து கருகியக் காதலன்!

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

English Summary: 50% Subsidized Seeds - Call for Farmers!
Published on: 16 June 2022, 10:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now