மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 December, 2022 6:32 PM IST
50% subsidy for setting up herb garden in homes!

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - தமிழக மக்கள் நோயற்று வாழ, தமிழக அரசு, தோட்டக்கலை துறையின் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் கீழ்,ஆனைமலை வட்டாரத்தில், மூலிகை தோட்டம் அமைக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை, அழைப்பு விடுத்துள்ளது. ஆனைமலை வட்டாரத்தில், தோட்டக்கலைத் துறையின், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூலிகை தோட்டம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.

வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வகைக்கு 2 வீதம், துளசி, திருநீற்றுபச்சிலை, வல்லாரை, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை, கீழாநல்லி, ஆடாதொடை, திப்பிலி, அஸ்வகந்தா, ஆகிய, 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன், 10 செடி வளர்ப்பு பைகள், 2 கிலோ வளர்ப்பு ஊடகம், 10 தேங்காய் நார்கட்டிகள், மண்புழு உரம், ஒரு தொழில்நுட்ப கையேடு ஆகியவையும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 70106 -81662, 73958- 55683 என்ற எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம், அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆனைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனா தேவி அவரது செய்தி தொடர்பு அதிகாரி மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: IMD-இன் சூறாவளி அறிவிப்பு: விவசாயிகள் அச்சத்தில்| TNAU| Agri & Food Startups-க்கு சிறப்பு பயிற்சி

அதே நேரம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் இந்தாண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் திருப்பரங்குன்றம் வட்டார வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பத்து வகையான மூலிகைச் செடிகள், செடி வளர்க்கும் 10 பைகள், வளர்ப்பு ஊடகம் 2 கிலோ, தென்னை நார் கட்டிகள் 10, தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் ஆதார் நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்திலுள்ள தோட்டக் கலைத் துறையில் முன் பதிவு செய்யலாம். உதவி அலுவலர்கள் ஆறுமுகம் (99941 41379), ஜெயபாலன் (86678 79177), அர்ஜுன் (96779 55093) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

G20| பசுமைக்குடில் PolyGreen House நிறுவ 70% மானியம்| TNAU வழங்கும் பயிற்சி| வெள்ளாடு வளர்ப்பு ...

PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்

English Summary: 50% subsidy for setting up herb garden in homes!
Published on: 05 December 2022, 05:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now