நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 10:18 PM IST

பல்வகை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.7000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது.


ரூ.6,000 நிதி (Rs.6,000 fund)

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் உதவுவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டமாகும். இந்தத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 3 தவணைகளாக, ஒரு தவணைக்கு 2,000ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

அதேபோல, மாநில அரசுகளும் தங்களது விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு அதிரடித் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

தண்ணீர் சேமிப்பு (Water storage)

விவசாயத்துக்கான தண்ணீரைச் சேமிக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பயிர் பல்வகைப்படுத்தும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. ’மேரா பானி-மேரி விராசத் யோஜனா என்ற இந்தத் திட்டத்தின் கீழ், நெல்லுக்குப் பதிலாக நீர் நுகர்வு குறைவாக விதைக்கும் விவசாயிக்கு ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு 7,000 ரூபாய் வழங்கப்படும்.

காலி நிலத்துக்கு பணம் (Money for vacant land)

நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் அந்த நிலத்தை காலி செய்தாலும் ஏக்கருக்கு 7,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பது இந்தத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இதன்படி, நெல்லுக்கு ஈடாக பருத்தி, நிலவேம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, சோயாபீன், எள், நிலக்கடலை, வெங்காயம், தோட்டக்கலை மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பதிவு (Farmers Registration)

இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, மேரி ஃபசல்-மேரா பயோரா போர்ட்டலில் மேரா பானி-மேரி விராசத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்வது எப்படி? (How to register?)

வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவுசெய்யலாம். வேளாண் வளர்ச்சி அலுவலரால் இதற்கான சரிபார்ப்பு செய்யப்படும். கடந்த ஆண்டு இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள், இந்த ஆண்டும் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?

நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!

English Summary: 7000 rupees fund for farmers - How to apply?
Published on: 18 May 2022, 09:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now