நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 5:06 PM IST

குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைய உள்ளது. இதன் மூலமாக, அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். தவிர 5 லட்சம் கிலோ விளை பொருட்களை இருப்பு வைக்கலாம் என, வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் கிராமத்தில், பல ஏக்கர் நிலையத்தில் 'டெர்மினல் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்' எனும் காய்கறி ஏற்றுமதி முனையம் துவக்கப்படும் என, 2010ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.

வேளாண் ஏற்றுமதி முனையம் (Agriculture Export Terminal)

முதற்கட்டமாக, இடம் தேர்வு செய்யும் பணியில், வேளாண் துறையினர் ஈடுபட்டனர். குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 35 ஏக்கர் மேயக்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதி முனையம் திட்டப் பணிகள் மேற்கொள்ள, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து, காய்கறி மற்றும் வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டிய பொருட்களாக விற்பனை செய்யப்பட உள்ளது.

வேலை வாய்ப்பு (Employment)

மேலும், 3 லட்சம் கிலோ முதல், 5 லட்சம் கிலோ காய்கறி வரையில் இருப்பு வைத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான கிடங்கு, காய்கறி சுத்தம் செய்யும் குடோன், தரம்பிரிக்கும் கூடாரம், 'பேக்கிங்' செய்யும் அறை, குளிரூட்டும் அறை என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிக்கு, 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, வேளாண் விற்பனை துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது: குன்றத்துார் அடுத்த, நாவலுார் பகுதியில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் துவக்க, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, 35 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்நிறுவனத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிறுவனம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக, 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். மேலும், உழவர் உற்பத்தி நிறுவனத்தினரின் விளை பொருட்களுக்குரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

நிலவில் மண்ணில் செடி வளருமா? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

விதை நெல் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு!

English Summary: Agricultural Export Terminal: Millions of kilos of produce can be stored!
Published on: 16 May 2022, 07:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now