மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2022 6:08 PM IST

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் தற்போது இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறுது. குறிப்பாக இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது, ஆரோக்கியத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் சிலர், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.

இதற்கு உதவும் வகையில், தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1997கிராம பஞ்சாயத்துகளிலிருந்து 193 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவர்கள் வேளாண்,தோட்டக்கலை,வேளாண் பொறியியல் படித்த பட்டதாரிகளாக இருப்பது அவசியம். அவ்வாறுத் தேர்வு செய்ய பட்டு அவர்கள் புதிய தொழில் முனைவோருக்காக 10 லட்சம் நிதி உதவி அளிக்க இந்த திட்டத்தில் வழி வகைசெய்யப் பட்டு அதற்காக 1.93 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

அக்ரி கிளினிக் (Establishment of agri clinic)

மண் வளம், பயிர்நலம், பயிர் உற்பத்தி தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல், மண்மற்றும் நீர் பரிசோதனை செய்தல்

வேளாண் சார்ந்த தொழில் தொடங்குதல்( Establishment of agri business activities).

நாற்று பண்ணை அமைத்தல், நர்சரி அமைத்தல்,நுண்ணூட்ட உரம் தயாரித்தல், உயிர் உரங்கள் உற்பத்திநிலையம் அமைத்தல்
உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை நிலையம் அமைத்தல்

பயனாளிகள்தேர்வு

  • பொது பிரிவினர் 80 சதவீதத்தினர்

  • பட்டியியல் வகுப்பினர்19%

  • பழங்குடியினர்1%

  • பெண் பயனாளிகள்30 சதவிகிதம்

  • என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

  • தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு முன்னுரிமை

    அளிக்கப்பட்டுள்ளன

இந்த அரிய வாய்பைப் படித்த பட்டதாரிகள் பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து மற்ற வர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவர்களாக மாறலாம்.

தகவல்

அக்ரி சு.சந்திர சேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

English Summary: Agricultural graduates have the opportunity to become entrepreneurs!
Published on: 14 February 2022, 06:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now