மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 August, 2022 8:07 PM IST

75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு திட்டக்குறியீடாக 30 எண்ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதி

  • இத்திட்டத்தின் கீழ் பலனடைய குறைந்தபட்சம் 2 மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.

  • சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் குழுவாக பயன் பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.

  • சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • பயனாளி கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இதை போன்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குள் பயனடைந்தவராக இருக்கக்கூடாது.

  • தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ரூ.4919/- (25% ஜிஎஸ்டி சேர்த்து) பங்குத் தொகையைச் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

  • 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

  • அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிய பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Agricultural implements at 75% subsidy for farmers!
Published on: 08 August 2022, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now