மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 December, 2020 5:13 PM IST

பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் விவசாயிகளின் உழைப்புக்கும், வியர்வைக்கும் வந்தனம் செய்வோம்!

பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் விவசாயிகளின் உழைப்புக்கும், வியர்வைக்கும் வந்தனம் செய்வோம்!

சௌத்ரி சரண்சிங் வரலாறு

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த செளத்ரி சரண் சிங், தான் ஆட்சியில் இருந்த 7மாத காலத்தில் ஜமீன்தாரி ஒழிப்பு முறை சட்டத்தை கொண்டுவந்தார். மேலும், விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்த சௌத்ரி சரண்சிங்கின் பிறந்தாள் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விவசாயம்

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயமாகும். மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சனைகளை பெருமளவில் குறைய வித்திட்டவர் சௌத்ரி சரண் சிங். அவர் காலகட்டத்தில் விவசாயப் பிரச்சனைகள் ஓரளவிற்கு குறைந்திருந்தாலும், இப்போது நிலைமை அப்படி இல்லை. மேலும் மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

 

விவசாயத்திற்கு மாற்று உண்டா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அதை உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் நாம் நிலவிலும் எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பு அளித்து எந்நாளும் வந்தனம் செய்வோம் என உறுதியேற்போம்

English Summary: All you Know Why National Farmers' Day Is Observed In India
Published on: 22 December 2020, 05:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now