மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 October, 2020 7:02 AM IST
Credit : IndiaMART

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை (Cotton Seeds) பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என கிருஷ்ணகிரி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

பருத்தி விதைகள் (Cotton Seeds)

இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் க.லோகநாயகி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள், விதைத்தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

  • இந்த மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

  • எனவே வீரிய பருத்தி மற்றும் பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கும்போது விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டும் வாங்க வேண்டும்.

  • பிற மாநிலங்களில் இருந்து வாங்க நேர்ந்தாலும், உரிய விதை விற்பனை ரசீதுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • பருத்தி ரகத்தின் விவர அட்டையில் பயிர் செய்ய உகந்த பருவம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்களை சரி பார்த்து வாங்கவும்.

  • விதை முளைப்புத் திறன் அறிய விரும்பும் பட்சத்தில் விதை விபரங்களுடன் ஒரு மாதிரி ரூ.30 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!

அதிக மகசூல் பெறத் துத்தநாகச் சத்து அவசியம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

English Summary: Attention is required in selecting quality cotton seeds during the rainy season- Advice to farmers!
Published on: 02 October 2020, 07:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now